ஞாயிறு, 7 மே, 2023

வேதங்கள் - பேதங்கள் -2

  

 சு.அறிவுக்கரசு

s5

மூன்று அக்னிகளாம்புவி அக்னிபர அக்னிநடு அக்னி என மூன்றுபுவி அக்னி மனிதர் மூட்டுவதுபர அக்னியால் மனித உயிர் இறக்குமாம்மூன்றாவது அக்னியால் தான் மழை பெய்கிறதாம்எவ்வளவு முட்டாள் தனமான புளுகுகள் என்பதைக் கவனிக்கவும்புவி அக்னியில் ஜாதவேதஸன்வைசுவாநரன்இரவு - பகல்குதிரைபறவைரதம்டமாரம்வில்நுனிஇருபருவம்இந்திரன்மருந்துசோமன்பர்ஜன்யன்விஷ்ணு முதலிய குணங்களைக் காணலாம் என்கிறார்கள்திரவினோதஸன்தனூன பாதன்நரஸாம்ஸன்பவமானன்ஜாதவேதஸன் எனப் பெயர்கள் உண்டு என்கிறார்கள்பர அக்னி திரவியம் தருவதால் திரவினோதஸன் எனவும் பரம் எனும் தேவ அக்னியின் மகனானதால் தனூனபதன் எனவும் நரஸாம்ஸன் எனவும் பெயர்களாம்பிறந்தவுடன் சகலமும் தெரிந்தவன் என்பதால் ஜாதவேதஸன் என்றும் பெயராம்நடு அக்னி என்பது இந்திரனாம்இடிமுழக்கம்ஈரத்தைப் பற்றுவதுவிருத்திரனைக் கொல்வது போன்ற பயங்கரச் செயல்களைச் செய்வது இதன் வேலையாம்இவனுக்க 26 பெயர்களாம்வாயுவருணன்ருத்ரன்பிரஹஸ்பதிவிஸ்வகர்மன்ஸரஸ்வதி போன்றவை உள்பட பெயர்களாம்.

அக்னி என்றால் நெருப்புஅதை மூன்றாக்கிமுப்பதுக்கு மேற்பட்ட பெயர்கள் வைத்தது அறிவற்ற செயல்தானேஆண் பெயரும்பெண் பெயரும் சேர்த்தே வைத்தது முட்டாள்தனமல்லவாபவுதீகப் பொருளை மனிதன் போலவே பாவித்துக் கல்யாணம்கருமாதி செய்வது கடைந்தெடுத்த அறிவிலித்தனமல்லவாஅக்னி தேவனாம்வருணன் பகவானாம்வாயுவும் பகவானாம்கடவுள் அல்லவாம்மிகைப்படுத்தப்பட்ட சக்தி (Personified)  என்று அரவிந்தகோஷ் விளக்கம் தந்தார்இவர்களின் பொய்ப் பெருமைகளுக்கு அளவே இல்லை. “சதவிம்ச பிரமாணம்“ என்றொரு நூலாம்பூமிவானம்கடல் போன்றவற்றை ஆய்ந்து எழுதப்பட்ட நூலாம்ஆனால் கைவசம் இல்லையாம்இருக்கும் இடமும் தெரியாதாம்பின் பெயர் மட்டும் எப்படித் தெரிந்ததாம்கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு என்பார்கள்இவர்கள் முட்டாள்கள்இவர்களின் புளுகுக்கு அல்பாயுசுதான்.

சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளன என்றும் அது தமஸ் என்றும் ஒளிப்பகுதியை ஜ்யோதி என்றும் வேதம் கூறுகிறதுஎந்தவித விஞ்ஞான அறிவும் பெற்றிராத நிலையில் இவர்கள் கூறுவதற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் கிடையாதுகருந்துளை (Black Hole)என்று அறிவியலில் உண்டுஇந்தப் பிரபஞ்சம் எனப்படும் பகுதி 4 விழுக்காடு என்றால்கருந்துளைப் பகுதி 96 விழுக்காடு எனுமளவுக்கு மிகப் பெரும்பகுதியை கருந்துளை என அறிவியல் அழைக்கிறதுஏதும் அறியாத ரிஷிகள் தமஸூக்கும் ஜோதிக்கும் இடையில் “பரமாத்மா” இருக்கிறது என்று கதையளக்கிறார்கள்பரமாத்மா என்றால் கடவுளாம்அது படைத்த மனிதர்கள் “ஜீவாத்மாவாம்அதிதியும் தக்ஷனும் இணைந்து அனேக தேவன்களையும் தேவதைகளையும் “உற்பத்தி” செய்தார்களாம்அக்னி அப்படி உருவான முதல் தேவனாம்சோமன் அக்னியுடன் பிறந்த இரட்டைகளில் மற்றொன்றாம். (அக்னிதக்ஷனுடன் அதிதியில் கலந்தபோது 13 ஆதித்யர்கள் தோன்றினார்களாம்இவர்கள் எல்லோரும் உலகுக்கு ஒளி தருகிறார்களாம்இப்படியெல்லாம் பிதற்றியவன் அரவிந்தகோஷ்வங்காளப் பார்ப்பான்வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து புதுச்சேரியில் பதுங்கிக் கொண்ட வீரன்இதேபோல் தப்பித்து வந்து பதுங்கிக் கொண்ட சுப்ரமணிய பாரதியின் நண்பன்இந்தக் கோழைகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் என்கிறார்கள் ஹிந்துக்கள்ஜாதிப் பாசம்தான் காரணம்.

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள்மொத்தம் 1017 சூக்தங்கள்இவற்றை அறிந்தவர்கள் 15 ரிஷிகள்ஒருவன் அறிந்ததை மற்றவன் அறிய மாட்டான்முழுவதும் அறிந்தவன் ஒருவனும் இல்லை.

ரிக்வேதக் குழப்பங்களில் சிறப்பான குழப்பம் இதுதான். “தேவர்கள் உலகங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்படைப்பு எப்படி என்பதை யார் அறிவான்அவன்தான் படைத்தானாஇல்லையாஎல்லாவற்றையும் அவனே அறிவான்ஒரு வேளை அவனும் அறியாதவனாஅவன் அறிந்தும் அறியாதது போல இருக்கிறானா?” என்ன விளங்கியதுஉங்களுக்குஇதனால்தான் கவிஞர் கண்ணதாசன் எழுதினார்படித்தால் விளங்குவது சித்தாந்தம்விளங்காதது வேதாந்தம் என்றார்.

மங்கள காரியங்களாம்சுப காரியங்களாம்அவற்றைச் செய்யும்போது மங்களகரமான மந்த்ரங்களைச் சொல்ல வேண்டுமாம்அவை சுவஸ்தி மந்த்ரங்களாம்கூடுதலாகச் சொல்லப்படும் மங்கள மந்த்ரங்களும் சில உண்டாம்அவை சாந்தி மந்த்ரங்களாம்.

அக்னிம் ஈளே புரோஹிதம் யக்ஞஸ்ய “என்று ரிக்வேதமுதல் மண்டலத்தின் முதல் பாடல் தொடங்கும்நெருப்புதான் எல்லாமே என்பது தான் ஆரியர் கொள்கைஅதை வணங்குகிறான் முதலில். “மது சந்தன விஸ்வாமித்ரன்” என்பது அடுத்த பாடல்வாயு பகவான் வணக்கம்ஸோமபானம் தயார் செய்துள்ளோம்குடிப்பதற்கு நீயும் இந்திரனும் வருணனும் வாருங்கள்யாகத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்று அழைக்கிறான்சோமபானம் மதுபானத்தில் ஒரு வகை இக்கால பிராந்திவிஸ்கிரம்ஜின் போன்ற ஒரு வகை இதைக் குடிக்கவா என்று பகவானைக் கூப்பிடுகிறானென்றால் ஹிந்து பகவான்கள் குடிவெறியர்கள் அல்லவா?

சோமபானத்தைத் தர்ப்பைப் புல்லில் நனைத்து வைத்திருக்கிறேன்வா என்று மூன்றாம் பாடல் இந்திரனைஅஸ்வினி தேவர்களை அழைக்கிறார் அத்துடன் அல்லாமல் கல்விக்கான பெண் கடவுள் ஸரஸ்வதியை அழைக்கிறான். (ஸரஸ்வதிக்கும் குடிப்பழக்கம் உண்டோ?)

அஸ்வினி தேவர்களை அழைக்கும்போதுமூன்று முறை வரச்சொல்கிறான்அவர்களின் தேர் பெரியதாம்தேருக்கு மூன்று சக்கரங்களாம். (இதை எழுதும்போதுவடுவூர் நாராயணன் அதனை மூன்று சக்கரங்கள் கொண்ட ஆட்டோ ரிக்ஷாவுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு அந்தத் தொழில்நுட்பத்தை மேலை நாட்டார் எடுத்துச் சென்றுவிட்டதாக அங்கலாய்க்கிறார்இதே மாதிரிதான் ஆரியப்புளுகுகள்சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன என்கிறார்கள்தேரோட்டிக்கு ஒரு கால் மட்டுமே என்கிறார்கள்அறிவியலின்படி சூரியன் நிலையாக ஒரே இடத்தில் சுழல்கிறதுவேதப் புளுகு எப்படி?) இந்த அஸ்வினி தேவர்கள்இறக்கை முளைத்த குதிரைகளாம்வான்வழியே 800 முதல் 1500 கி.மீவேகத்தில் பறக்கக் கூடிறயவைகளாம்இவை அறுவை மருத்துவர்களாம்தலையைக்கூட மாற்றி அறுவை மருத்துவம் செய்பவர்களாம்இதயமாற்று போல தலை மாற்றாம். (பிள்ளையார் தலைக்குப் பதில் யானைத் தலையை வைத்தது யார்இவர்கள் அல்லர்.

இப்படிப்பட்ட அபத்தங்கள் நிறையஅக்னிவருணன்இந்திரன்ஸரஸ்வதிருத்திரன்போற்றித்துதிப் பாடல்கள் இரண்டாம் மண்டலம் முழுக்க நிறைந்துள்ளனமூன்றாம் நான்காம் மண்டலங்களிலும் அதே பிதற்றல்களேமூன்று கடவுள்களும் முப்பது தேவர்களும் கொண்டாடப்படுகின்றனமீதி மண்டலங்களிலும் இதே மாதிரி அபத்தங்கள்அபஸ்வரங்கள்நம் ஊர்ப்பார்ப்பனர்கள் ரிக்வேதத்தில் வானியலைப் பற்றிய தெளிவான அறிவு இருந்திருப்பதாகக் கூறுகிறார்கள்விளக்க வேண்டாவாசந்திர மண்டலமும் அதனுள் அடங்கிய நட்சத்திரக் கூட்டமும் புதிய தகவல்களை அளிக்கின்றனவாம்சூரியக் குடும்பம் என்பதுதான் அறிவியல்இவர்களின் சந்திரன் குருபத்தினி தாரா மீது மையல் கொண்டு சாபம் பெற்று தேய்ந்து வளரும் கதையின் கதாநாயகன்எதை வானியல் அறிவு என்று புளுகுகிறார்கள்எல்லாமே அபத்தக் களஞ்சியம்.

இவை போதாவென்று 30 மந்த்ரங்கள் கடைசியில் உள்ளனவாம்அவற்றில் ஒன்றில் கனவுகளின் தந்தை எமன் என்கிறதுஅதிபயங்கரமான கெட்ட கனவுகளைக் காண்பவர்கள் தூக்கத்திலேயே இறந்து விடுவார்களாம்யமலோகத்தில் தோன்றும் கனவுகள் பூமியில் இறங்கி மனிதனுக்குள் நுழைகிறதாம்கனவு மனிதனைக் கொன்று விடலாமாம்எமன்தான் பூமியில் பிறந்த முதல் மனிதன் என்கிறது வேதம்முதலில் இறந்தவனும் அவன்தானாம்இறந்து வானுலகம் போனபோது எமலோகம் காலியாக இருந்ததால் அவன் மன்னன் ஆனானாம்செத்துப் போனவர்களுக்கெல்லாம் (பித்ருக்கள்அவன் அரசனாம்பித்ருக்கள் அவனது பிரஜைகளாம்க்ளைமாக்ஸ் மங்கலமாக முடிகிறதாம்.

தொடரும்....

 

சூரியைக்கும் ஸோமனுக்கும் விவாஹம் நடந்ததும் முடிகிறதுசூரியைசூரியனின் (ஸவிதாவின்மகள்ஸோமன் நட்சத்திரங்களின் நடுவே இருக்கிறான்ஸோமன் என்பது பிராந்தியோவிஸ்கியோதிருமண நாளில் யாரும் ஸோமனைக் குடிப்பது இல்லையாம்அஸ்வினிகள் மாப்பிள்ளைத் தோழர்களாம்தெய்வத் திருமணத்திற்கு எல்லாத்தேவர்களும் வாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். “தஸாஸ்யம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி” என்று வாழ்த்துகிறார்கள்இந்திரனேமணமகளுக்கும் பத்துப் பிள்ளைகளை அளித்திடுஅவளின் கணவனை அவள் பதினொன்றாம் மகனாக ஆக்கிக் கொள்வான் என வாழ்த்துகிறார்கள்பத்தும் புதல்வர்களாம்புதல்வியே வேண்டாமாம்என்ன புத்திஆண் ஆதிக்க ஆரியச் சமுதாயப் புத்தி!

10552 பாடல்களிலும் ஒரே விதமான செய்திகள்தான்சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு... பாடியவனுக்குச் சலிப்பு தட்டவில்லைபடிக்கும் நமக்குத்தான்...

ரிக் வேதத்திற்கான உபநிஷத்அய்தரேய உபநிஷத் என்பதாம்உலகப் படைப்பு பற்றி இந்த உபநிஷத் பேசுகிறதாம்உலகம் படைக்கப்பட்டதாஉருவானதாமதவாதிகளும்மதநூல்களும் மட்டுமே படைப்பு என்கின்றனஅறிவியலோபரிணாமம் என்கிறதுஎண்பித்திருக்கிறதுஇந்த உபநிஷத் ஒரேயடியாக நான்கு லோகங்கள் படைக்கப்பட்டதாகப் புளுகுகிறது. 1) அம்பலோகம் - சொர்க்கத்திற்கு மேலே உள்ளதாம். 2) மரீசிலோகம் - ஒளி நிறைந்த இடைவெளியாம்மரீசிகா என்றால் கானல் நீர். 3) மர அல்லது மர்த்ய லோகம் - பூமியைக் குறிப்பது 4) ஆபலோகம் - பூமிக்குக் கீழே உள்ளதாம்.

கடவுள் பிரம்மதேவனைப் பற்றி நினைத்ததாம்பிரம்மதேவனின் வாய் முட்டை பிளப்பது போலப் பிளந்ததாம்வாயிலிருந்து பேச்சு வந்ததாம்அதிலிருந்து நெருப்பு வந்ததாம்மூக்கு தோன்றியதாம் மூக்குத் துவாரங்களிலிருந்து மூச்சு வந்ததாம்மூச்சிலிருந்து காற்று தோன்றியதாம்கண்கள் தோன்றினபார்வையிலிருந்து சூரியன் தோன்றினானாம்காதுகள் தோன்றினதிசைகள் தோன்றினதோல் உண்டாகியதுதோல் பிளந்துமயிர்கள் தோன்றினமயிரிலிருந்து செடிகொடிகளும் மரங்களும் இதயத்தில் துவாரங்களும் உண்டாயினஇதயத்திலிருந்து மனம் என்ற தனியான பகுதி உருவாகியதாம். (மனம் என்பதற்கும் இதயத்திற்கும் தொடர்பில்லைமூளையின் செயல்பாடுகளே மனம் என்கிறது அறிவியல்மனத்திலிருந்து சந்திரன் தோன்றியதாம்தொப்புள் தோன்றியதாம்அதிலிருந்து அபானன்அபானனிலிருந்து மரணம் தோன்றியதாம்குறி தோன்றியதாம்பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்துவிலிருந்து தண்ணீரும் உண்டாயிற்றாம்உபநிஷத்தின் உடற்கூறு வினோதமாக உள்ளதேமருத்துவ அறிவியலுக்கும் விரோதமாக உள்ளதே!

மனித உடம்பு 11 வாசல்களை உடையதாம்கண்கள் 2, காதுகள் 2, நாசித்துளைகள் 2, வாய்தொப்புள்குறிகுதமபிரம்மரந்திரம் என்பவையாம்இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறதாம்அதன் வழியே ஆவியை விடுபவன்மரணமற்ற நிலையை அடைகிறானாம்வேறு வழிகளில் இறப்பவன் மறுபிறவியை அடைகிறானாம்ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியே உயிரை வெளியேற்ற முடியுமாம்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு இறையுணர்வு அதிகமாம்கருப்பையிலிருந்து வெளியே வந்து க்வக்வக்வ என்று அழுகிறதுசமஸ்கிருதத்தில் க்வ என்றால் எங்கே என்று பொருளாம்பூமிக்கு வந்ததும் குழந்தை கடவுளை எங்கே என்று தேடுகிறதாம்முட்டாள் தனமான உளறல்அல்லவா?

இதுதான் ரிக் வேதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக