ஞாயிறு, 3 ஜனவரி, 2021

ஆனால் , அவாள் ஆத்தில் ?

கேள்வி : ஓர் ஆண் அரசியல்வாதிக்கும் , ஒரு பெண் அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம் ? 

பதில் : பெண் அரசியல்வாதி , ' வாங்கடா பார்க்கலாம் ' என்று பேசலாம் . ஆண் அரசியல்வாதி ' வாங்கடி பார்க்கலாம் ' என்று பேச முடியாது . - ' துக்ளக் ' , 16.12.2020 , பக்கம் 30 . 

ஆனால் , பெற்ற தாயையும் , பெற்ற மகளையும் மட்டும் ' வாடி , போடி ' என்று அவாள் ஆத்தில் பேசலாம் . ( பெண்கள் என்றாலே துக்ளக் குருமூர்த்தி கும்பலுக்கு அப்படியொரு குரூரம் - ஒவ்வாமை நோய் ஆனால் , மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இதில் விதிவிலக்கு ) என்ன கொடுமை ? மனைவிக்கு போன் கால் வந்து யாருடன் எத்தனை மணிநேரம் அரட்டை அடித்தாலும் கணவன்மார்கள் யாரும் யார் என்னவெனக் கேட்பதில்லை . கணவனுக்குப் போன் கால் வந்து 60 செகண்ட் பேசினால் , அடுக்களையில் அப்படியே பாத்திரத்தைப் போட்டுவிட்டு ஓடிவந்து யார் , என்ன எனக் கேட்பது ஏன் ? என்ன கொடுமை சார் இது ? - ' குமுதம் ' , 16.12.2020 இதில் கூறப்பட்டுள்ளது - ஒட்டுமொத்தமும் அப்படித்தான் என்பது போல
காட்டப்படுவது சரியா ? பெண் நீண்ட நேரம் போன்கால் பேசினால் கணவன்மார்கள் கேட்கவே மாட்டார்களா ? ஆணோ , பெண்ணோ நீண்ட நேரம் போனில் பேசினாலும் சரி , மற்ற வகையில் பேசினாலும் சரி , அது பிரச்சினையாக்கப்படுவது பொதுவான நிலைப்பாமே இந்த நிலையில் , பெண்களைக் குற்றவாளியாக்குவது ஒருவகை வக்கிரப் புத்தியே 50 . ஆண்கள் வேலைக்குப் போய்விட்டு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் யாரும் கேட்பதில்லையே பெண் அலுவலக வேலை நிமித்தம் கொஞ்சம் 
தாமதித்து வந்தால் , எத்தனை எத்தனை நேரடி கேள்விகள் - குறுக்குக் கேள்விகள் . கணவன் மட்டுமல்ல , வீட்டில் இருக்கும் குஞ்சுகள் , கூளான்கள் கூட கேட்பதில்லையா ? இதைப்பற்றி எல்லாம் எழுதமாட்டார்களா ? புத்தி குறைந்தவர்களுக்கு ... கேள்வி : இறைவழிபாடு , சிலை வழிபாடு - முக்கிய வேறுபாடு என்ன ? பதில் : ஆன்மிகத்தில் முதிர்ந்தவர்களுக்கு உருவமில்லாத இறைவழிபாடு என் போன்ற ஆன்மிக சாதாரணங்களுக்கு சிலை வழிபாடு - ' துக்ளக் ' , 25.11.2020 பாரதத்தில் ஒரு பகுதி என்று கூறப்படும் உத்தர கீதை ' எனும் வேதாந்த நூல் இவ்வாறு கூறுகிறது . துவிஜதர்களுக்கு ( பார்ப்பனர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர்களுக்குத் தெய்வம் அக்னியில் ; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில் புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில் இதில் ' துக்ளக் குருமூர்த்தி கடைசி வகையைச் சேர்ந்தவர் என்பது அவரது பதிலில் இருந்தே தெரிகிறது .
 - ஊர்சுற்றி
விடுதலை,15.12.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக