ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஆகமங்கள்படி பார்ப்பனர் கோயில்களில் நுழைய உரிமை இல்லை


- பி. சிதம்பரம் பிள்ளை

இந்துக் கோவில்கள் எக்காலத்திலும் சகல சாதி மதஸ்தர்களுக்கும் உரித்தான தாகவேயிருந்தன. இந்த நோக்கத்துடன் தான் அவை ஸ்தாபிக்கப்பட்டன. நேற் றுத்தான் இதில் சச்சரவுகள் ஏற்பட்டன.
ஆகமங்களை நாம் சரிவரப் படித்துணர்ந்தால், பிராமணனுக்கு ஒரு கோவிலிலாவது நுழைந்து வழிபட உரிமையில்லை யென்பதையும். இங்கிலீஷ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை சட்டத்தையும் பாமர மக்களின் அறியாமையையும், மூட நம்பிக்கை யையும் தனக்குச் சாதகமாக்கி உபயோ கப்படுத்தியதால் அவன் அடைந்துள்ள சகல உரிமைகளையும், இழக்க நேரிடுமென்பதையும் அறியலாம். இந்தக் காரணத்தால்தான், பிராமணர்களுக்கு ஆகமங்கள் மீது பயம் ஏற்படுகின்றது.
ஆகமங்களுக்கும். ஸ்மிருதிகளுக்கு முள்ள வித்தியாசமென்ன என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும். இதைப் பற்றி விரிவாக திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களும், திரு.பி.டி. சீனிவாசய்யங்கார் எம்.ஏ. எல்.டி. அவர்களும் எழுதியிருக்கிறார்கள்.
"ஸ்மிருதிகளின் உற்பத்தி வேத மாகும். ஆகமங்களின் உற்பத்தி திராவிட மாகும். இந்த வித்தியாசம் மிக முக்கிய மானது." இருபிறப்பாளர் மட்டுமே வேதங்களைப் பயிலலாம். ஆனால் சகல சாதி மதஸ்தர்களும் ஆகமங்களைப் பயிலலாம். அதாவது ஒருவன் பறையனாகிலும் சரி, சக்கிலியனாகிலும் சரி, சண்டாளனாகிலும் சரி ஆகமங் களைச் சரிவரக் கற்றுக் கொள்ள அவ னுக்கு உரிமை உண்டு. வேதங்களையும், ஸ்மிருதிகளையும் பயில்வதிலிருப்பது போன்ற கட்டுப்பாடு எதுவுமில்லை.
ஆகையினால், ஆகமங்களைத் தழுவிய பிராமணர்களைப் பிராமண சமூகத்தில் கடைப்பட்டவர்களென வேதியர்கள் கருதுவார்கள். அது மட்டுமல்ல; பிறப் பினால் ஸ்மிருதிகளையும், புராணங் களையும் படிக்கத் தகுதியற்றவர்களாக இருப்பவர்களுக்கே ஆகமங்கள் ஏற்பட்டன வென்றும் அவர்கள் சொல் கிறார்கள் ஆகமங்கள் சர்வ சமய சமரச மான பரந்த நோக்கமுடையவை களாகவும், வேதங்கள் மிகக் குறுகிய நோக்கமுடையவைகளாகவுமிருப் பதைக் கண்டு. கல்கத்தா ஹைக்கோர்ட் நீதிபதியாக இருந்த சர் ஜான் உட்ராப் என்பவர் அதிசயிக்கிறார்.
ஆகம முறைப்படி வழிபாடு நடை பெறுகின்ற கோவில்களெல்லாம் தென் னாடு முழுவதும் இம்முறைதான் கைக் கொள்ளப்படுகிறது - இரு பிறப்பாளருக்கு மட்டுமென்ற வரையறையின்றி எல்லா வகுப்பினருக்கும். எல்லா சாதியினருக்கும் பொதுவானவையென்பது மேலே எடுத்துக்காட்டப்பட்டவற்றினின்றும். இனிக் கூறப் போவதனின்றும் அறியக் கிடக்கின்றது. நான் இதை இன்னும் தெளிவுபடுத்துகிறேன்.
பணகுடி ஆலய வழக்கில் ஜஸ்டிஸ்-கதாசிவ அய்யர் அவர்கள் குறிப்பிட்ட இரண்டு விஷயங்களை இங்கே கவனிக்க வேண்டும்:
1) “கர்ப்பக்கிரகத்தைப் பொறுத்தமட்டி லும், கோவில் பூசாரியினத்தைச் சேர்ந்த பார்ப்பனருக்கு மாத்திரந்தான் கர்ப்பக் கிரகத்துக்குள் நின்று வழிபட உரிமை யுண்டு. சாதாரண பார்ப்பனர்களும், பிள்ளைமார்களும், முதலியார்களும் வெளி மண்டபத்தில் நின்றுதான் தொழ உரிமை உடையவர்கள்”
2) சாதாரண பார்ப்பனர்கள் கர்ப்பக் கிரகத்தினுள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டதில்லை. ஏனெனில், தீட்சை பெறாத பார்ப்பனர்கள் உள்ளே பிரவேசிப்பதனால் அவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் விக்கிரகத்துக்குத் தீட்டு ஏற்படுவதாகக் கருதப்பட்டு வந்தது.
ஆகவே, ஆகமங்களைப் பற்றிச் சிறிதேனும் தெரிந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரவர்களின் அபிப்பிராயப்படி சாதாரண பிராமணன் கர்ப்பக்கிரகத்துக் குள் பிரவேசிக்கக் கூடாது பிரவேசித்தால் "தீட்டு ஏற்படும். அவ்விதம் பிரவேசிக்க உரிமையுள்ளவர் அவருடைய அபிப் பிராயப்படி கோவில் பூசாரி இனத்தைச் சேர்ந்த பார்ப்பனர்தான். இந்தக் கோவில் பூசாரி இனத்தைச் சேர்ந்த பார்ப்பனர் யாரென்று ஆராய்வோம்.
கோவில் பூசாரிகள் பார்ப்பனர்களில் மிகக் கேவலமானவர்கள் என்று கருதப் படுகிறார்கள். மனு காலத்திலிருந்தே இந்த உணர்ச்சியிருந்து வருவதாகத் தெரிகிறது என்று அறிவு முதிர்ந்த திரு. பி.ஆர். கணபதி அய்யர் அவர்கள் கூறுகிறார்.
ஜஸ்டிஸ் சேஷகிரி அய்யர் அவர்கள் (பிரிவு கவுன்ஸில்வரைச் சென்ற ஒரு வழக்கில்) இவ்வாறு கூறுகின்றார்:- பிரதிவாதியின் குடும்பஸ்தர்கள் (அதாவது கவுண்டர்கள், வெள்ளாளர் அல்லது சூத்திரர்கள் இந்தக் கோவில் அர்ச்சகர்கள். ஆனால், இவர்கள் கோவில் பூசாரி வகுப்பைச் சேர்ந்தவர்களல்ல வென்பது உண்மை தான். எனினும் இன்ன வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் கோவிலில் பூசை செய்யலாமென்பதாக விதி எதுவுமில்லை”.
பேர் பெற்ற சிதம்பரம் க்ஷேத்திரத்தில் ஏராளமான தீட்சதர்களிருக் கின்றார்கள் அவர்கள் பூசை செய்யும் கடவுளோடு தாங்களும் பூலோகத்துக்கு இறங்கி இந்துவிட்தாகக் கூறுகிறார்கள் ஆனால் இந்த தீட்சதர்கள் சாதாரண கோவில் அர்ச்சகர் வகுப்பைச் சேர்ந்தவர்களல்ல.
சுருங்கச் சொல்லுமிடத்து, சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் பார்ப்பனர்களல்ல. கோவில் பூசாரி பிராமணனாக இருக்க வேண்டுமென்பதில்லை. எந்தக் குறிப் பிட்ட வகுப்பையோ, சாதியையோ சேர்ந் திருக்க வேண்டுமென்ற நியதியுமில்லை.
ஜஸ்டிஸ் சேஷகிரி அய்யரவர்களின் மேற்சொன்ன அபிப்பிராயத்தை பிரிவி கவுன்ஸிலர்களும் ஒப்புக் கொண்டார்கள். பிராமணரல்லாத வகுப்பைச் சேர்ந்தவர் ஒரு இந்துப் பொதுக் கோவிலில் பூசாரி யாக இருப்பது ஒருவேளை நூதனமாகத் தோன்றலாம். ஆனால், சென்னை மாகாணத்திலுள்ள சில இந்துப் பொதுக் கோவில்களில் சூத்திரர்கள் பூசாரிகளாக இருப்பது வெளிப்படை' ஆகையினால் ல்ட்கோவில்பூசாரி பார்ப்பனர்கள்' என்று ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர். அவர்கள் சொன்னதை மற்றொரு பிராமண உரை யாசிரியரான பி.ஆர். கணபதி அய்யர் அவர்கள் “தாழ்ந்த பிராமணர்கள்” என்பதாகத் சொன்னர் ஜஸ்டிஸ் சேஷகிரி அய்யரவர்களும் பிரிவி கவுன்ஸிலர் களும் பிராமணரே அல்ல வென்பதாகவும் ஆனால், சூத்திரரென்றும் சொன்னார்கள்.
இத்தகைய சூத்திரனுக்குத்தான் கர்ப் பக்கிரகத்தினுள்ளே பிரவேசிக்க உரிமை யுண்டு சாதாரண பார்ப்பனனுக்குப் பிர வேசிக்க உரிமையில்லை. சங்கராச்சாரி யார் கூடப்பிரவேசிக்க ஆகமப்படி உரிமையில்லை. ஏனெனில் அவர் தீட்சை பெற்றவரல்ல, ஆகையினால் ஆகமப்படி, பிராமணன் தொழுவதனால் விக்கிரகத் துக்குத் தீட்டு ஏற்படுகின்றது. சூத்திரன் பூஜை செய்வதனால் கடவுளுக்குத் திருப்தி உண்டாகின்றது. இன்னும் அனேக விஷயங்களிலிருக்கின்றன.
1) தீட்சை பெற்ற பிராமணன் கூட சைவக் கோவில்களிலிருக்கும் விக்கிர கங்கள் எதையும் தொடக் கூடாது. ஆனால், மடப்பள்ளியில் சமையற் காரனாகவோ அல்லது வேறு தாழ்ந்த வேலைகளைச் செய்பவனாகவோ இருக்கலாம்.
2) தீட்சை பெற்ற பறையன்கூட தீட்சை பெறாத பிராமணன் கையிலி ருந்து உணவோ தண்ணீரோ பெறக் கூடாது.
(3) 'தீட்சை பெறாத பிராமணனை அன்னிய மதஸ்தனென்று கருத வேண்டும்.'
சகல இந்துக்களுக்கும் - தீண்டத் தக்கவர்க்கும், தீண்டத் தகாதவர்க்கும் - ஆகம முறைப்படி தென்னிந்தியக் கோவில்கள் எல்லாம் திறந்திருந்தன வென்பது மேலே குறிப்பிட்டவற்றினின் றும் இன்னும் குறிப்பிடப்படுவன வற்றினின்றும் விளங்கும். உண்மை யிலேயே அந்தக் காலத்தில் ஆலயப் பிரவேசத்தில் யாருக்கும் எவ்விதமான தடையுமிருந்ததில்லை என்பது ஆக மங்களைச் சரிவரப் படித்தவர்களுக்குப் புலனாகும். இன்று ஏற்பட்டுள்ள தடை யானது ஆகமத்துக்கு முரணானதும், மதத்துக்கு விரோதமானதும், அரசியல் காரணமாக ஏற்பட்டதுமாகும்.
ஆகமத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பெரியார் கூறுவதாவது: சைவ மதமும், வைஷ்ணவ மதமும், பறையர்கள் உள்ளிட்ட் சகல சாதிக்காரர்களையும் தம்மிடம் உட்படுத்திக் கொள்ளும் படியாகத் தீட்சை யென்ற சம்பிரதா யத்தைக் கைக்கொண்டிருக்கின்றன. ஒரு பறையனுங்கூட - அவன் இந்த சமயங் களில் சேர்ந்தவனாகவும் பரிசுத்தமான பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ப வனாகவுமிருந்தால் - ஆலயத்தினுள் பிரவேசிக்கலாம். வர்ணாசிரம தர்மமே பஞ்சமர்களை ஆலயத்தில் நுழைய வொட்டாமல் தடுத்தது.
(நூல் ஆலயப்பிரவேச உரிமை - அத்தியாயம் 10 - ப: 74-77)
(தொடரும்)

- பி. சிதம்பரம் பிள்ளை

ஆகமங்களின் அடிப்படையான கொள்கைகள் அடியில் வருமாறு:
1) வைதிகப் பார்ப்பானைக் கோவிலில் நுழையாமல் புறக்கணிப்பது மட்டுமன்றி, அவனை அன்னிய மதஸ்தன் என்றும் கருத வேண்டும்.
2) கோவில் பூசாரியாவதற்குரிய சோதனை தீட்சையொன்று தான்; சாதியோ, வகுப்போ அல்ல.
3) தீட்சை பெறாத பிராமணன் கோவிலுக்குள் சமையற்காரன் போன்ற வேலைக்காரனாகக்கூட இருக்க முடி யாது. அவன் விக்கிரகத்தைத் தொடக் கூடாது; கர்ப்பக் கிரகத்துக்குள் பிரவே சிக்கக் கூடாது.
4) பிராமணனுக்குத் தீட்சை பெற அருகதையிருப்பதுபோலவே, ஒரு பறை யனோ, சண்டாளனோ தீட்சை பெறலாம்.
5) ஆகமப்படி கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கும், வழிபடு வதற்கும், சாதி, வர்ணம், வகுப்பு இவற்றைப் பற்றிக் கவனிக்க வேண்டியதில்லை. கடவுள் சந்நிதானத்தில் சாதி இந்துக்களும், சாதி இந்துக்களல்லாதவர்களும் ஒன்றுதான். இதுதான் ஆகமங்களின் தத்துவம்.
6) ஆகமங்கள் ஒரு வகுப்பாருக்கு உயர்வும்.மற்றொருவகுப்பாருக்குத் தாழ்வும் கற்பித்ததில்லை. .
சுருங்கச் சொல்லுமிடத்து. சகல கோவில்களையும், எல்லா மக்களுக்கும் எவ்வித வித்தியாசமுமின்றி இந்த ஆகமங்கள் திறந்து விட்டன. எல்லா மக்களும் தீட்சை பெற்று வழிபட வேண் டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. இதைத் தவிர, வேறு மாறுபாடான பொருள் கற்பிப்பது அசம்பாவிதமாகும்.
அவ்வாறு கற்பிப்பதற்கு இடமில்லை; ஏனெனில், அன்னிய மதஸ்தராகக் கருதப்பட வேண்டிய வைதிகப் பார்ப் பனரைக் கூடக் கோவிலுக்குள் நுழைய ஆகமங்கள் அனுமதியளித்தது. அவர் களும் தீட்சை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்றி வேறல்ல. கோவிலுக்குள் சென்று வழிபட்ட பிறகும் வைதிகப் பார்ப்பனர்கள் தீட்சை பெறா திருந்தால், அவர்களை யாரும் வெளியி லாக்கினதில்லை. ஆனால், விக்கிரகங் களைத் தொடவும், கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையவும், பூசாரிகளாக இருக்கவும், வேறுவிதமான வேலைகள் செய்யவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இன்றையத் தினம் இந்துக் கோவில் களில் பிராமணர்கள் நுழைந்திருப்ப தினின்றும் பண்டைக் காலத்தில் எல்லா மக்களுக்கும் ஆலயப் பிரவேச உரிமை தாராளமாக அளிக்கப்பட்டிருந்தது என்பது வெளிப்படையாகின்றது. ஆகவே, ஆகமங்களுக்கு விரோதமான வைதிகப் பார்ப்பனரைக் கூடக் கோவிலுக்குள் நுழையவிட்டிருந்தார்களென்றால், அக்காலத்திலிருந்த சமண மதஸ்தரையும், புத்த மதஸ்தரையும், பறையரையும், பிராமணரையும், எல்லா பேர்களையும் தீட்சை பெறும் பொருட்டு கோவிலுக்குள் நுழைய விட்டிருப்பார்கள் என்பது உறுதியாகின்றது.
அதாவது, இப்பொழுது மகமதியப் பள்ளிகளும், கிறிஸ்தவக் கோவில்களும் இருப்பது போன்று, அக்காலத்தில் இந்துக் கோவில்கள் எல்லா மதஸ்தர்களுக்கும் திறந்தேயிருந்தன என்பதாகும்.
“தமிழர்களின் சரித்திரம்” என்ற மிக ருசிகரமான புஸ்தகத்தில் (History of the Tamils by Mr. P.T.Srinivasa Iyengar, Reader of Indian History to the Madras University)
ஆகமங்களைப் பற்றி அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:
“வைதிக சாஸ்திரங்கள் மக்களை நான்கு வருணங் களாக வகுத்து, நான்காவது வருணத்தைச் சேர்ந்தவர் களை வேதம், வேதாந்தங்களைப் படிப்ப தினின்று நீக்கவும் செய்தன. மக்களை நான்கு வர்ணங்களாக வகுத்ததனின்றும் வர்ணாசிரம தர்மம் ஏற்பட்டு தர்மங்கள் வருணங்கட்கிடையே வகுக்கப்பட்டன. இதன் முடிவு பிராமணன் மட்டும் சன்னி யாசியா கலாமென்றும் சன்னியாசத்தைப் பயின்றால் மட்டுமே மோட்சம் கிடைக்கு மென்றும் ஏற்பட்டது. அதாவது வைதிக முறைப்படி, பிராமணர்கள் மட்டுமே மோட்சம் பெறலாமென்பதாகும். ஆகமங் களோ இந்தக் கோட்பாடுகளையெல்லாம் எதிர்த்து நின்றன. ஒரு சண்டாளனுங்கூட, ஆகமப்படி விஷ்ணு அல்லது சிவனு டைய விக்கிரகத்தைப் பெற்று அதற்குப் பூஜை செய்யலாம்.
தாழ்ந்த வகுப்புகளைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவன் கோவிலுக்குள் சென்று தரிசித்திருப்பதைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. கண்ணப்ப நாயனார் காளகஸ்தி கோவிலில் சிவனுக்கு இறைச்சியைக் கொடுத்தார். எட்டாவது நூற்றாண்டிலிருந்த பாணனாழ்வார் மிகக் கேவலமான வகுப்பைச் சேர்ந்தவர். அவரது வகுப்பார்கள் சிறீரங்கம் கோவிலைச் சுற்றியுள்ள தெரு வீதிகளிற் கூட நடக்கக் கூடாது. ஆனால், அவரை யும் ஆழ்வாராக்கிக் கோவிலில் வைத்துப் பூஜித்து வருகின்றார்கள். நான்கு சாதிப் பாகுபாட்டை ஆகமங்கள் அங்கீகரிக்க வில்லை. ஆனால் வேதத்தில் ஒரு பகுதியான வேதாந்தமோ சூத்திரர்கள் பயிலக் கூடாததாக இருந்தது. கிரியைகள் மூலம் பரிசுத்தமடைய சூத்திரர்களுக்கு உரிமை இல்லையாதலால், அவர்கள் வேதங்களைக் கேட்கவோ, படிக்கவோ கூடாதென பாதராயணர் எழுதியிருக் கின்றார்.
ஆனால், இதற்கு நேர்மாறாக ஆகமங்கள் எல்லா பேரும் படிக்கக் கூடிய விதத்தில் திறந்தனவாக இருந்தன. ஆகையால் இன்றுகூட தீட்சை பெற்ற ஒரு பறையன் தான் பெற்ற உபதேசத்தை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கவும், அந்தப் பிராமணனுக்குக் குருவாக வரவும் முடியும்.”
அதே புஸ்தகத்தில் திரு. சீனிவாசய் யங்கார் அவர்கள் அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-
“வேதியர்கள் ஆகாமியர்களை மிகவும் இழிவாகக் கருதி வந்தார்கள். இது முன் காலத்தில் ஆரியர்கள் இந்நாட்டிலிருந்த மக்களோடு காண்பித்த வெறுப்பின் தொடர்ச்சியாகும். இந்த வெறுப்பின் தொடர்ச்சியினால் இப்பொழுதும் கோவில் பூசாரிகளை இழிவான பிராமணர்கள் என வேதாந்திகள் கருதுகிறார்கள். 50 வருஷ காலத்திற்கு முன்னால் வரையிலும் ஒரு கோவிலுக்குள்ளும் பிரவேசிக்காத வேதியர்கள் நான் அறிய இருந்து வந்தது எனக்குத் தெரியும். வேதாந்தம் ஆகம வழியைப் பலமாகக் கண்டித்தது.
ஆகையினால், ஆகமங்கள் வருணா சிரம தர்மத்துக்கு விரோதமானவை யாகும்.
எமிலி ஸெனார்ட் (Emile Senart) என்னும் பிரஞ்சு தேசத்து சமஸ்கிருதப் பண்டிதர் கூறுவதாவது:- ஆரிய சமுதாயம் இரு பிரிவா ஏற்பட்டுள்ளது. உயர்ந்த மூன்று சாதிகள் முதற் பிரிவிலும், நான்காவது சாதி மட்டும் இரண்டாவது பிரிவிலும் அடங்கின.
“முதல் வகுப்பில் இரு பிறப் பாளர்களான (Dvijas) ஆரியர்கள் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு இயற்கைப் பிறவியோடு மத சம்பந்தமாக உபநயனத்தினால் மற்றொரு பிறப்பும் ஏற்படுகின்றது. உபநயனத்தினின்றும் சூத்திரர்கள் விலக்கப்பட்டிருக்கின்ற மையால் - அதாவது இரண்டாவது பிறப்பு சூத்திரர்களுக்கு இல்லாதபடி யால் - சாஸ்திரங்களைக் கற்பதிலோ, கல்வி பயில்வதிலோ, உயர்ந்த மூன்று சாதியார்க்கும் ஏற்பட்டுள்ள யாகங்களி லும், சடங்குகளிலும் கலந்து கொள்வ திலோ அவர்களுக்குப் பங்கு கொள்ள இடமில்லை”.
“சில குறைந்த சடங்குகளை மட்டும் சூத்திரர்கள் செய்து கொள்ள சம்மதிக்கப் பட்டிருக்கிறதனால், ஆரிய சமூகத்தில் சூத்திரர்களுக்கு ஒரு தாழ்மையான இடமே கொடுக்கப்பட்டிருக்கின்றது”.
உபநயனத்தால் மட்டுமே ஒருவன் ஆரிய வருணத்தை அடைய முடியும் உபநயனம் பெறுவது வரையிலும் ஆரியன் சூத்திரனாகவே இருக்கின்றான் என்று மனு குறிப்பிட்டிருக்கின்றார். ஆகவே, இம்மாதிரிப் பாகுபாடானது மத சம்பந்தமான பாகுபாடேயன்றி, கேவலம் சமூக சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு பிரிவல்ல.
உயர்ந்த மூன்று சாதியைச் சேர்ந்த ஒருவனது பிரேதத்தை ஒரு சூத்திரன் தூக்கிச் சென்றால், அந்த உயர்ந்த சாதிக்காரனுடைய ஆத்மா மோட்சம் அடைவதில்லை. பார்ப்பனர்களுக்குள் சில குற்றங்கள் ஏற்பட்டால் அவர் களைக் கண்டிப்பது அவர்கள் சூத்திரர் களாகி விட்டார்கள் என்ற காரணத் தாலேதான். அதாவது அவர்கள் சாதிப் பிரஷ்டர்களாகி விட்டார்கள் என்று பொருள்படும். சூத்திரன் செய்யக்கூடிய பெருங்குற்றம் - பாதகம் - ஒன்றுமே யில்லையென்று மனு மேலும் கூறுகிறார். “கொடும்பாதகம் செய்யக் கூடிய நிலை சூத்திரனுக்கு இல்லையென்பது மனு வின் கருத்தாகும். சூத்திரனுக்கு அளிக் கப்பட்டிருக்கும் அந்தஸ்து மிகத் தாழ்வானது. எனவே, அவன் எத்தகைய பெரிய குற்றத்தைச் செய்த போதிலும் அதைவிடத் தாழ்வான நிலை எய்தப் போவதில்லை. அவன் மேற்செல்ல வழியில்லாததால் கீழ் நிலையும் அடைய முடியாது”.
(நூல் ஆலயப்பிரவேச உரிமை - அத்தியாயம் 11 - ப: 78-82)
-விடுதலை,19,20.12.15

1 கருத்து:

  1. ஐயா
    அந்த அனைத்து சாதியினரின் அர்ச்சகர் நியமனம் என்ன ஆயிற்று ?

    பதிலளிநீக்கு